‘நாப்கினில் மறைத்து 1.2 கிலோ தங்கம் கடத்தல்’- வசமாக சிக்கிய பெண்கள்!

 

‘நாப்கினில் மறைத்து 1.2 கிலோ தங்கம் கடத்தல்’- வசமாக சிக்கிய பெண்கள்!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 1.2 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை கடத்தி வந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்துள்ளது. வழக்கம் போல விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான பெண்கள் 2 பேரை சோதனை செய்த அதிகாரிகள், அவர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

‘நாப்கினில் மறைத்து 1.2 கிலோ தங்கம் கடத்தல்’- வசமாக சிக்கிய பெண்கள்!

அந்த பெண்கள் தங்கக் கட்டிகளை சானிடரி நாப்கினில் வைத்து, தனது உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.62 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஒரு பெண் சென்னையை சேர்ந்த தெய்வானை என்பதும் மற்றொரு பெண் புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி என்றும் தெரிய வந்துள்ளது. தெய்வானை மற்றும் வசந்தியை போலீசார் கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.