கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து கோர விபத்து : 2 பேர் பரிதாப பலி!

 

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து கோர விபத்து : 2 பேர் பரிதாப பலி!

உத்திரமேரூர் அருகே இருக்கும் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே உள்ள மாத்தூரில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. கல்குவாரியில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. இன்று காலை வழக்கம் போல ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு பாறைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராத விதமாக கல்குவாரியின் ஒரு பக்கம் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தில், 6 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களுடன் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கற்குவியலில் சிக்கியுள்ளனர்.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து கோர விபத்து : 2 பேர் பரிதாப பலி!

தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், பாறைகளுக்கு அடியில் இருந்து 2 பேரை சடலமாக மீட்டுள்ளனர். விபத்தில் 4 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் நீட்டிப்பதாக தெரிகிறது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என சக தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.