ஒரே நாளில் மூன்று எம்எல்ஏக்கள் கொரோனாவிற்கு பலி!

 

ஒரே நாளில் மூன்று எம்எல்ஏக்கள் கொரோனாவிற்கு பலி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டாம் அலையில் பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். அவர்களில் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் மூன்று எம்எல்ஏக்கள் கொரோனாவிற்கு பலி!

தற்போது உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார். லக்னோ மேற்கு தொகுதி எம்எல்ஏ சுரேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா (76), அவாரியா சத்தார் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் சந்திர திவாகர் (56) ஆகிய இருவரும் உத்தரப்பிரதேசத்தில் நேற்று உயிரிழந்திருக்கின்றனர்.

ஒரே நாளில் மூன்று எம்எல்ஏக்கள் கொரோனாவிற்கு பலி!

மத்தியப் பிரதேசத்தில் 49 வயதான காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கலாவதி பூரியாவும் காலமாகியிருக்கிறார். முன்னதாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், ஒடிசாவில் பிபிலி தொகுதி வேட்பாளர் அஜித் மங்கராஜ், மேற்கு வங்கத்தில் ரிசாவுல் ஹக் என மூவரும் கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.