கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு ஹான்ஸ் மூட்டைகள் கடத்த முயன்ற 2 பேர் கைது!
ஈரோடு ஆகஸ்ட் 31
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு ஹான்ஸ் மூட்டைகள் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஹாசனூர் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது வெங்காயம் மூட்டைகளின் நடுவே சுமார் 23 மூட்டைகளை கொண்ட ஹான்ஸ் பாக்கெட் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லங்கோடு பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. உடனடியாக வாகனத்தை ஓட்டி வந்த ஷ்யாத், ஆஷிக், ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
-ரமேஷ்கந்தசாமி