2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

 

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

லக்னோ: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்தியா விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள எகனா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

முதலாவது டி20 போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேபோல், இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது