2வது நாளாக நடிகர் விஜய், அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…ரூ.65 கோடி பறிமுதல்!?
இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
பின்பு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமானவரித்துறையினர் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய்யின் வீட்டிலும் இரண்டாவது நாளாக சோதனை நடந்து வருகிறது. பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அதை எவ்வாறு பெற்றீர்கள் உள்பட பல கேள்விகளை வருமான வரித்துறையினர் விஜய்யிடம் துருவி துருவி கேட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.