2வது திருமணத்தில் ஜாலியாக போஸ் கொடுத்த கணவர்… மேடையிலேயே வெளுத்து வாங்கிய மனைவி!

 

2வது திருமணத்தில் ஜாலியாக போஸ் கொடுத்த கணவர்… மேடையிலேயே வெளுத்து வாங்கிய மனைவி!

கடந்த 12 ஆம் தேதி திட்சாரி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் குமார் . இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மஞ்சு என்ற மனைவி இருக்கும் நிலையில் பங்கஜ் குமார் வெகு பெண்ணை 2 வது  திருமணம் செய்ய முடிவெடுத்துளார். அதன்படி கடந்த 12 ஆம் தேதி திட்சாரி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. 

ttn

இதுகுறித்து தகவலறிந்த மஞ்சு தனது குடும்பத்துடன்   திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். அப்போது மணமேடையில் அமர்ந்திருந்த பங்கஜ் குமாரை அடி வெளுத்து வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

tt

பங்கஜ் குமாருக்கு எதிராக மீரட் நகர் காவல்நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில்  உள்ள நிலையில் அவர் 2 வது  திருமணம் செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.