2ம் நாளே பிக் பாஸ் வீட்டில் ஒப்பாரி வைத்த மோகன் வைத்யா!

 

2ம் நாளே பிக் பாஸ் வீட்டில் ஒப்பாரி வைத்த மோகன் வைத்யா!

மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு நாள் ஆகிவிட்டது. ஆட்டம், பட்டத்துடன் முதல் நாள் கழிந்த நிலையில் இரண்டாவது நாள் எப்பவும் போல் சண்டையுடன் ஆரம்பித்து.

மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு நாள் ஆகிவிட்டது. ஆட்டம், பட்டத்துடன் முதல் நாள் கழிந்த நிலையில் இரண்டாவது நாள் எப்பவும் போல் சண்டையுடன் ஆரம்பித்து. மற்றொரு பக்கம் சாண்டி, மோகன் வைத்யா இருவரும் இணைந்து ஹவுஸ் மேட்ஸை சந்தோஷமாக வைத்துள்ளனர். 

இந்த நிலையில் யாரு கண் பட்டதோ தெரியவில்லை, பிக் பாஸ் வீட்டில் அழுகை ஆரம்பித்துள்ளது. ஆம்… சற்று முன்பு இன்றைக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் மோகன் வைத்யா தனக்கு அன்பு கிடைக்கவே இல்லை என்றும் அன்பை காட்ட ஒரு மனிதர் கூட இல்லவே இல்லை என்று கதறி அழுதுள்ளார்.

உடனே மற்ற ஹவுஸ் மேட்ஸ் உங்களக்கு நாங்கள் இருக்கிறோம் என்று அவரை சமாதானம் பணியுள்ளனர். நேற்று வரை சந்தோஷமாக இருந்த வீட்டில் இன்று முதல் அழுக்கை ஆரம்பித்துள்ளது. அவர் திடீரெண்டு ஏன் எப்படி அழுகிறார், அல்லது இது ஒரு டாஸ்க்கா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.