திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண்.. தந்தை எடுத்த விபரீத முடிவு

 

திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண்.. தந்தை எடுத்த  விபரீத முடிவு

அந்த இளைஞரை காதலிப்பதை பிடிக்காத பெற்றோர் தன் மகளை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஆனாலும் மகளோ திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் தொடர்ந்து தனிமையில் சந்தித்து உறவாடி வந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண்.. தந்தை எடுத்த  விபரீத முடிவு

வேறொருடன் ஆணுடன் தன் மருமகள் உல்லாசமாக சுற்றுவதையும், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததையும் மாமனாரும், மாமியரும் பார்த்து திடுக்கிட்டு, கேள்விகேட்க, அப்போதைக்கு இனிமேல் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் காதலுடன் சுற்றி வந்துல்ளார்.

இது கணவனுக்கும் தெரியவர, பிரச்சனை பெரிதாகி, பெற்றோர் வீட்டுக்கே அவரை அனுப்பி விடுகின்றனர். இன்னுமா நீ அவனை விடல.. என்று தந்தை ஆத்திரத்துடன்கேட்கவும், அவனை என்னால் மறக்க முடியாது என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இளம்பெண்.

அவன் சரிப்பட மாட்டான் என்றுதானே வேறொரு இடத்தில் திருமணம் செய்துகொடுத்தேன். இப்போது அந்த வாழ்க்கையை கெடுத்து, எங்களை தலைகுனிய வைத்துவிட்டாயே என்று ஆத்திரப்பட்டவர், தனது துப்பாக்கியை எடுத்து மகளை சுட்டு கொலை செய்தார்.

பின்னர் தானே போலீசில் சென்று சரணடைந்துவிட்டார். தனது இரட்டை குழல் துப்பாக்கியையும் போலீசில் ஒப்படைத்துவிட்டார் சந்திரமோகன்.

உ.பியில் பதேபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கான்பூரில் உள்ள சச்செண்டியின் சிங்பூர் பகுதியை சேர்ந்த நாகேந்திரசிங் என்பவை மணந்த சுவாதியின் மரணத்தில் வட்ட அலுவலர் விசாரணைநடத்தி வருகிறார்.