செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ள நிலையில், 866 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 37,763 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி!

 

அதனால் கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா அதிகமாக பரவியிருக்கும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னையில் இருந்து மக்கள் வெளியே செல்லாத வண்ணம் கடும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,202 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டிருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே கொரோனா அச்சத்தை அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.