ரஜினி ரசிகர் தற்கொலை; குழந்தைகளுடன் கதறும் மனைவி

 

ரஜினி ரசிகர் தற்கொலை; குழந்தைகளுடன் கதறும் மனைவி

ரஜினியின் கட்சி தொடங்காததால் அவரது தீவிர ரசிகர் ராஜ்குமார்(வயது34) தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி அதிரவைக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலித்தொழிலாளியான ராஜ்குமார் ரஜினியின் வெறித்தனமான ரசிகர். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஆவலாக எதிர்பார்த்து இருந்தவர், அவர் வரவில்லை என்று திட்டவட்டாம அறிவித்துவிட்டதும், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

ரஜினி ரசிகர் தற்கொலை; குழந்தைகளுடன் கதறும் மனைவி

இரண்டு நாட்களாகவே மன உளைச்சலில் இருந்த ராஜ்குமார், நேற்று மாலையில், ‘’ரஜினிதான் என் வாழ்க்கை. இதுதான் என் கடைசி பதிவு’’என்று பதிவிட்டிருக்கிறார். அதன்பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்த ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளுடன் கதறி அழுதது அப்பகுதியினரை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ரஜினி ரசிகர் தற்கொலை; குழந்தைகளுடன் கதறும் மனைவி

ரஜினியின் உடல்நிலை பற்றிய வதந்தியினால் கடந்த 2011ல் ஊத்துக்கோட்டை அடுத்த பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த ரஜினி வெங்கடேசன் (வயது29) சேர்ந்த ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2017ம் ஆண்டில் பிறந்த தினத்தில் ரஜினி கட்சியை அறிவிக்காததால், மன உளைச்சலில் இருந்த சேலம் அழகாபுரம் பாறைவட்டத்தை சேர்ந்த ஏழுமலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ரஜினி ரசிகர் தற்கொலை; குழந்தைகளுடன் கதறும் மனைவி

கடந்த 2018ல் தேனி மாவட்டத்தின் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டதால் செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளையை சேர்ந்த சத்தியமூர்த்தி(42) இம்மாதத்தின் துவக்கத்தில், ரஜினி கட்சி தொடங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில், ரஜினியின் கட்சி தொடங்காததால் அவரது தீவிர ரசிகர் ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி அதிரவைக்கிறது.