நம் வீடும், நாடும் சுய சார்புள்ள சக்தியாக மாற… தமிழிசை சவுந்தரராஜன்

 

நம் வீடும், நாடும் சுய சார்புள்ள சக்தியாக மாற…  தமிழிசை சவுந்தரராஜன்

நாளை ஆங்கிலபுத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதியுள்ள வாழ்த்துச்செய்தியில், 2021ம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் சுகத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நம் வீடும், நாடும் சுய சார்புள்ள சக்தியாக மாற…  தமிழிசை சவுந்தரராஜன்

இயற்கை பேரிடர்கள் இல்லாதா ஆண்டாகவும், கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்து இயற்கை வளம் மிகும் ஆண்டாக அனைவருக்கும் அமைதி தரும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும் என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார்.

மேலும், நம் வீடும், நாடும் சுய சார்புள்ள சக்தியாக மாற நாம் நம் நாட்டில் தயாரிக்கும் பொருள்களையே பயன்படுத்தி நாட்டின் பெருமையையும், பொருளாதாரத்தையும் உயர்த்துவோம் என்று சபதமேற்போம்.

நம் வீடும், நாடும் சுய சார்புள்ள சக்தியாக மாற…  தமிழிசை சவுந்தரராஜன்

வேற்றுமை களைந்து ஒற்றுமையோடு அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை கொண்டாடுவோம். இந்த ஆண்டில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.