இது ரஜினி முடிவல்ல..எம்மிடம் முன்பே ஒருமுறை கூறினார்… திருமாவளவன் பரபரப்பு

 

இது ரஜினி முடிவல்ல..எம்மிடம் முன்பே ஒருமுறை கூறினார்… திருமாவளவன் பரபரப்பு

நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு.

பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என்று தெரிவித்துள்ளார்.

இது ரஜினி முடிவல்ல..எம்மிடம் முன்பே ஒருமுறை கூறினார்… திருமாவளவன் பரபரப்பு

கொரோனா சந்தேகத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், இது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளதற்காகத்தான் திருமாவளவன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், நடிகர் ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவு நல்ல முடிவு. வறட்டு கவுரவம் பார்க்காமல் உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்மையை வெளிப்படையாக கூறியதை நான் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பாஜகவினரின் அழுத்தத்துக்கு ஆளாகாமல், தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் எடுபடாது என்பதை புரிந்து கொண்டு திரு.ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். பாஜக உள்ளிட்ட தரகு வியாபாரிகளுக்கு இது ஏமாற்றம் தான். கால் நூற்றாண்டுகால திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் இது என்றும், வாக்கு வங்கி இல்லாமலே ஆட்சி அதிகாரத்துக்கு குறுக்கு வழியில் வர விரும்பிய மதவெறி கட்சிக்கு தான் பெரும் ஏமாற்றமும் பாதிப்பும் என்று தெரிவித்திருக்கிறார்.