அதிவேகமாக பரவி வரும் கொரோனா.. சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு!

 

அதிவேகமாக பரவி வரும் கொரோனா.. சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் பரவி வருகிறது. முன்னதாக ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரையிலேயே இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது இரு மடங்காக பரவி வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிவேகமாக பரவி வரும் கொரோனா.. சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.