18 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

 

18 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 18 வயது மாணவியை தடுத்து நிறுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

18 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

மே 31 ஆம் தேதி இரண்டு நண்பர்களுடன் வெளியே சென்ற இளம்பெண்ணை, 6 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இசட்நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டுவந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விஷால் படேல் மற்றும் அனுஜ் படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விஷால் படேலை பிடிக்கமுயற்சித்தபோது காலில் துப்பாக்கி குண்டு பட்டதில் படுகாயமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது,