சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 19 பேர் பலி!

 

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 19 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. குறிப்பாக சென்னையில் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும் கோயம்பேடு சந்தையில் கூட்டம் குவிந்ததாலும் கொரோனா அதிகளவில் பரவியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டனர்.

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 19 பேர் பலி!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேரும் கேஎம்சியில் 3 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.