கசப்பான அனுபவங்கள் காரணமாக… சீமானுக்கு கல்யாணசுந்தரம் எழுதிய விலகல் கடிதம்

 

கசப்பான அனுபவங்கள் காரணமாக… சீமானுக்கு கல்யாணசுந்தரம் எழுதிய விலகல் கடிதம்

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், இன்று அதிமுகவில் இணைந்தார். இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகப்போவதாக கடந்த பல நாட்களாகவே செய்தி பரவி வந்தபோதெல்லாம், அவற்றை மறுத்து வந்தார் கல்யாண சுந்தரம். ஆனால், அந்த செய்திகள் எல்லாம் உண்மை என்று இன்றைக்கு அவர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

கசப்பான அனுபவங்கள் காரணமாக… சீமானுக்கு கல்யாணசுந்தரம் எழுதிய விலகல் கடிதம்

முன்னதாக அவர் நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலகல் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், ‘’ அண்ணா வணக்கம். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இனிமேல் கட்சியில் தொடர முடியாத நிலையிலிருப்பதால், இக்கடிதம் மூலமாக எனது விலகலை அறிவிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கசப்பான அனுபவங்கள் காரணமாக… சீமானுக்கு கல்யாணசுந்தரம் எழுதிய விலகல் கடிதம்

அவர் மேலும் அக்கடிதத்தில், ‘’இந்த பயணத்தில் என்னோடு பேரன்போடும், உதவிகரமாகவும் பயணித்த அனைத்து உறவுகள் பொறுப்பாளர்கள் என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும், தங்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவிப்பதோது, எதிர்கால உங்கள் பயணம் பெரு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.