அதனால்தான் சொல்கிறேன் நானும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான்… கமல்

 

அதனால்தான் சொல்கிறேன் நானும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான்… கமல்

தான் எம்.ஜி.ஆரின் நீட்சி என்றும், எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என்றும் கமல்ஹாசன் சொல்லிவரும் நிலையில், தேர்தல் வந்தால்தான் சிலர் எம்.ஜி.ஆரை கொண்டாடி வருகிறார்கள் என்று அதிமுகவினர் வசைபாடு வருகின்றனர்.

அதனால்தான் சொல்கிறேன் நானும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான்… கமல்

ஆனந்த ஜோதி படத்தில் சிறுவனாக கமல் நடித்தபோது எம்.ஜி.ஆர். பிசியாக இருந்தார். அந்த பிசியிலா கமலை மடியில் வைத்து தாலாட்டி இருப்பார். அதனால் கமல் எம்.ஜி.ஆர். மடியில் வளர்ந்தவர் இல்லை என்பதை அடித்துச்சொல்வேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியிருக்கிறார்.

அதனால்தான் சொல்கிறேன் நானும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான்… கமல்

இந்நிலையில் சென்னை போரூர், பூந்தமல்லியில் பிரச்சாரம் செய்தார் கமல். போரூர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாலத்தின்கீழ் மக்கள் கூட்டம் அதிமாக நின்றிருந்தது.

பிரச்சாரத்தில் பேசிய கமல்,‘’எங்களது முதல் கோஷமா ‘நாளை நமதே’என்பதுதான். தேர்தல் வந்தால் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதாக சொல்லும் அவர்கள் இத்தனை நாளும் ஏன் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். மக்கள் திலகம். நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான். அதனால்தான் சொல்கிறேன் நானும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான். எம்.ஜி.ஆரின் நீட்சிதான்’’ என்று பேசினர்.