அருவருப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்… பா.வளர்மதி

 

அருவருப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்… பா.வளர்மதி

விஜய் டிவியில் கடந்த மூன்று சீசன்களை தாண்டி தற்போது நான்காவது சீசனில் இருக்கிறது பிக்பாஸ். இந்தி, தெலுங்கு என்று பலமொழிகளில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தாலும் அரசியல் காரணமாக தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால் விஜய் டிவியில் கமல்ஹாசன் பங்கேற்று நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும், அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

அருவருப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்… பா.வளர்மதி

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் அதையே சொல்கிறார். அருவருப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்கிறார்.

அருவருப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்… பா.வளர்மதி

அவர் மேலும் இது குறித்து, ‘’நாடகம், சினிமா,கூத்து என்றால் அடிப்படையில் ஒரு கதை இருக்கும். பாட்டு, சண்டை இருக்கும். மேக்கப் போட்டு நடிக்கிறார்கள். ஆனால், பிக்பாஸில் என்ன அடிப்படை இருக்கிறது. மக்களும் அதைப்போய் ஏன் தான் பார்க்கிறார்களோ என்று தெரியவில்லை. இனியாவது மக்கள் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும். கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் அந்த நிகழ்ச்சியால் குடும்பங்கள் கெட்டுப்போகின்றன. அதை முழுவதுமாக தடை செய்துதான் ஆகவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.