ஊத்திமூடினது ஊருக்கே தெரியும்; பாத்துதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை…கமல் மீது விந்தியா பாய்ச்சல்

 

ஊத்திமூடினது ஊருக்கே தெரியும்; பாத்துதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை…கமல் மீது விந்தியா பாய்ச்சல்

அதிமுக ஆட்சியையும், முதல்வரையும் தொடர்ந்து விமர்சித்து வந்த கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கமெண்ட் அடித்தார் முதல்வரர் எடப்பாடி பழனிச்சாமி.

ஊத்திமூடினது ஊருக்கே தெரியும்; பாத்துதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை…கமல் மீது விந்தியா பாய்ச்சல்

இதையடுத்து முதல்வரை இறங்கிஅடிக்க ஆரம்பித்துவிட்டார் கமல். முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆரம்பித்து,சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்று எம்.ஜி.ஆர். பாடலை பாடியதோடு அல்லாமல், நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என்று பிக்பாஸ் மூலமே மீண்டும் முதல்வரை தாக்கினார்.

ஊத்திமூடினது ஊருக்கே தெரியும்; பாத்துதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை…கமல் மீது விந்தியா பாய்ச்சல்

எம்.ஜி.ஆர். பாடலை பாடி, எம்.ஜி.ஆர். பெயரைச்சொல்லி ஓட்டு கேட்டு அதிமுகவினரின் கால்களில் கமல்தான் விழுகிறார். கமல்தான் காலை பிடிக்கிறார் என்று அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் நடிகையுமான விந்தியா, ‘’உங்க உத்தமவில்லன் ஊத்திமூடின படம்னு ஊருக்கே தெரியும், பாத்துதான் தெரிஞ்சுகணும்னு அவசியமில்லை, அந்த மாறிதான் நீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்கற பிக்பாஸ்ம். விஜய் டிவிக்கு viewership ஏத்தறத விட்டுட்டு உங்களை நம்பி நாசமாபோன தயாரிப்பாளர்களை வாழவைக்கிற வழி பாருங்க…’’என்று கமலுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.