அலங்காரம் செய்து திருமண மண்டபத்திற்கு புறப்பட்ட மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி! நெகிழவைத்த மணமகன்!

 

அலங்காரம் செய்து திருமண மண்டபத்திற்கு புறப்பட்ட  மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!  நெகிழவைத்த மணமகன்!

திருமண மண்டபத்திற்கு புறப்பட்டு வரும் நேரத்தில் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிவிட்ட பெண்னை நிச்சயத்தபடி குறித்த நேரத்தில் தாலிகட்டி மணமகளின் பெற்றோரை ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்தினார் மணமகன். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் நடைபெற்றுள்ளது.

ஆர்த்திக்கும் அவதேஷுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணம் என்பதால் நேற்று முன் தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வீட்டில் அலங்காரம் செய்துகொண்ட ஆர்த்தி, மண்டபத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி விழபார்த்தது. அந்த குழந்தையை காப்பாற்ற ஓடிய ஆர்த்தி, கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

அலங்காரம் செய்து திருமண மண்டபத்திற்கு புறப்பட்ட  மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!  நெகிழவைத்த மணமகன்!

எழுந்திருக்க முடியாமல் அலறிய ஆர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகெலும்பில் பலத்த அடி என்பதால் எழுந்து உட்காரவே சில மாதங்கள் ஆகும். அதுவரைக்கும் படுத்த படுக்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

அலங்காரம் செய்து திருமண மண்டபத்திற்கு புறப்பட்ட  மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!  நெகிழவைத்த மணமகன்!

இதனால் ஆர்த்தியின் திருமணம் நின்றுவிட்டதாகவே நினைத்து வேதனைப்பட்டனர். ஆனால், அவதேஷ் நிச்சயம் ஆன அன்றே ஆர்த்தி எனக்கு மனைவியாகிவிட்டார். அதனால் அவள் எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னதோடு அல்லாமல், தாலியும் கட்டிவிட்டார்.
கூடிய சீக்கிரத்தில் அவள் தேறி விடுவார். அதுவரைக்கும் நான் ஆர்த்திக்கு உதவியாக இருப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கும் அவதேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.