தேவர் வழியில் பாஜக…தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொண்ட நமக்கு வெற்றி நிச்சயம்.. எல்.முருகன்

 

தேவர் வழியில் பாஜக…தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொண்ட நமக்கு வெற்றி நிச்சயம்.. எல்.முருகன்

சேலத்தில் நடந்த பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பிரச்சாரத்தை பாஜகதான் முதலில் தொடங்கியது. அந்த வேல் யாத்திரை பிரச்சாரத்திற்கு அரசு எத்தனையோ தடைகள் போட்டும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வேல்யாத்திரையை நடத்தினோம்’’ என்றார்.

’’திராவிட முன்னேற்ற கழகத்தினரின் போலி முகத்திரையை கிழித்தெறிந்துவிட்டு, ‘தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள்’ எனும் தேவர் ஐயாவின் வழியில் பாஜக சென்று கொண்டிருக்கிறது, அதற்கு தமிழக மக்களிடையே கிடைத்துள்ள ஆதரவோடு, ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி’ எனும் இலக்கை நாம் அடைவோம் .

தேவர் வழியில் பாஜக…தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொண்ட நமக்கு வெற்றி நிச்சயம்.. எல்.முருகன்

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டற கலந்து சென்றுகொண்டிருக்கும் பாஜகவுக்கு, தமிழக மக்கள் மத்தியில் மிக்கப்பெரிய ஆதரவும் இருக்கிறது. அந்த ஆதரவோடு நாமும் செல்வோம்,. நமது இலக்கை நோக்கி செல்வோம். நமது இலக்கு, நமது உழைப்பு எல்லாம் வருகிற தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியாகத்தான் இருக்கும்’’ என்ற முருகன், .

’’234 தொகுதிகளில், 228 கொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தேர்தலில் வேட்பாளர்களை விட பொறுப்பாளர்களும், அமைப்பாளர்களூம்தான் மிக முக்கியமானவர்கள். யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். அவர்களின் வெற்றி பொறுப்பாளர்கள் கையில் உள்ளது’’என்றார்