விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கத்தியால் குத்தி கொலை

 

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கத்தியால் குத்தி கொலை

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாலும் அந்த சம்பவம் தொடர்பாக நடந்த சாலை மறியல் போராட்டத்தாலும் திருவள்ளூரில் பதற்றம் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதுசத்திரம் கிராமத்தில் வசிக்கும் ராஜாவுக்கும் பூந்தமல்லி விஜய் ரசிகர் மன்ற செயலாளரான அசோக்குமார் என்பவருக்கும் மிடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜாவுடன் சேர்ந்து அவரது மகன் முத்துவும் சேர்ந்து அசோக்குமாரை தாக்கியுள்ளனர்.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கத்தியால் குத்தி கொலை

பதிலுக்கு அசோக்குமாரும் தாக்கியுள்ள அப்போது மறைத்து வைத்துள்ள கத்தியை எடுத்து ராஜா குத்தியதில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் அசோக்குமார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலைவழக்குத் தொடர்பாக வெள்ளவேடு போலிசார் ராஜாவிடமும் முத்துவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில் கொலையாளிகளை கைது செய்யக் கோரி அசோக்குமாரின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவள்ளூர் – பூந்தமல்லி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.