சத்தியநாராயணன் ரிட்டர்ன்!கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

 

சத்தியநாராயணன் ரிட்டர்ன்!கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் ரஜினிக்கு அடுத்ததாக தெரிந்த பெயர் என்றால் அது சத்தியநாராயணன். தன் அண்ணனின் பெயரை கொண்டிருப்பதாலேயே ரஜினியும் சத்தியநாராயணன் மீது அதிக மரியாதை வைத்திருந்தார். ரஜினி சினிமாவில் பிஸி்யாக நடித்துக்கொண்டிருந்த சமயங்களில் எல்லாம், வாரம்தோறும் ரசிகர்களை சந்தித்து வந்த நேரங்களில் எல்லாம் மன்றத்தின் தலைவராக இருந்தவர் சத்தியநாராயணன்.

சத்தியநாராயணன் ரிட்டர்ன்!கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

பின்னாளில் அவர் மீது ஏற்பட்ட அதிருப்தியினால் அவரை மன்ற பொறுப்பில் இருந்து விலக்கிவைத்து, ராகவேந்திரா மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கிவிட்டு, சுதாகரை மன்றத்தின் தலைவர் ஆக்கினார் ரஜினி.

ஆனால், இப்போது கட்சி தொடங்கும் நேரத்தில் சத்தியநாராயணன் பக்கத்தில் இருந்தால் ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்று முடிவெடுத்துள்ள ரஜினி, அவரை அழைத்து மன்றத்து பொறுப்புகளை எடுத்துச்செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறாரம்.

சத்தியநாராயணன் ரிட்டர்ன்!கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!


முழுமையாக களத்தில் இறங்கச்சொல்லி ரஜினி உத்தரவு இன்னமு வரவில்லையாம். ரஜினியின் உத்தரவுக்காக அவர் காத்திருக்கிறார்.

ரஜினி மன்ற நிர்வாகிகளும் சத்தியநாராயணன் திரும்ப வருவதை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

என்னதான் மேற்பார்வையாளர், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று ஊருக்குச்சொன்னாளும் உள்ளுக்குள் ரஜினின் எடுக்கும் முடிவுகள் வேறொன்றாகத்தான் இருக்கிறது.