ஓ.பி. சீட்டில் இரட்டை இலை! திரண்டு வந்த திமுகவினர்!

 

ஓ.பி. சீட்டில் இரட்டை இலை! திரண்டு வந்த திமுகவினர்!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதர நிலையத்தில் நேற்று புறநோளிகளுக்கு வழங்கப்படும் ஓ.பி.சீட்டின் பின்புறம் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இருந்துள்ளது கண்டு நோயாளிகள் அதிர்ந்தனர்.

இந்த செய்தி அப்பகுதியில் தீயாய் பரவியதால், திமுகவினர் திரண்டு வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஓ.பி. சீட்டில் இரட்டை இலை! திரண்டு வந்த திமுகவினர்!

அங்கிருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து அவர்கள் கேட்டபோது, ‘’புற நோயாளிகளுக்கான ஓபி சீட்டினி அரசு சார்பில் இன்னமும் வழங்கவில்லை. இது பற்றி தெரிந்ததால், இப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர், தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை எங்களுக்கு இலவசமாக வழங்கினார். அதை கிழித்து வைத்துதான் புறநோயாளிகளுக்கு ஓபி சீட்டு கொடுக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

இனிமேலும் அந்த அந்த துண்டு பிரசுரத்தை வழங்கக்கூடாது என்று திமுகவினர் கேட்டுக்கொண்டதால், மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்தது.