முருகனுடன் விவாதம் நடத்த தயார் – கார்த்திக் சிதம்பரம்

 

முருகனுடன் விவாதம் நடத்த தயார் – கார்த்திக் சிதம்பரம்

விவசாயிகளுக்கு எதிரான மசோதாவுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்து பாரத் பந்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

முருகனுடன் விவாதம் நடத்த தயார் – கார்த்திக் சிதம்பரம்

பின்னர், கல்லல் ஒன்றியத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்தில் பங்கேற்ற விவசாயிகள், அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டு மானகிரியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததை அறிந்து, அவர்களை கார்த்திக் சிதம்பரம் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

திருமயம் சட்டமன்றத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்தில் பங்கேற்ற விவசாயிகள், அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டு திருமயத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் கார்த்திக் சிதம்பரம்.

முருகனுடன் விவாதம் நடத்த தயார் – கார்த்திக் சிதம்பரம்

ஆதரவு தெரிவித்ததோடு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட் கொடுத்தார்.

இதையடுத்து அவர் பெங்களூரு செல்வதற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.

அப்போது, வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘’பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் வெறும் சடங்கிற்காக மட்டுமே விவாதங்களை நடத்திவிட்டு, குருட்டுத்தனமாக தாங்கள் நினைக்கும் சட்டங்களை நிறைவேற்றி விடுகிறது பாஜக.

முருகனுடன் விவாதம் நடத்த தயார் – கார்த்திக் சிதம்பரம்

அப்படித்தான் வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றிவிட்டார்கள். எந்த கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

விவசாய சந்தைகாஇ அதிகப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சொன்னது. ஆனால், அதைச்செய்யாத பாஜக, படிநிலைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, தற்போதிருக்கும் சட்டத்தை மட்டும் நிறைவேற்றி விட்டார்கள்.

இதுதெரியாமல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டுகிறார் முருகன். முதலில் முருகன் காங்கிரஸ் கொண்டுவந்தது குறித்து படிக்க வேண்டும். அதன்பிறகு அவர் விவாதம் செய்ய விரும்பினால் காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’’என்றார்.