ஸ்டாலின் கோவைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது… எச்சரித்த அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ்

 

ஸ்டாலின் கோவைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது… எச்சரித்த அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ்

அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ’’ஆ.ராசாவும், ஸ்டாலினும் முன்னாள் முதல்வரை தவறாக பேசி வருகின்றார்கள். உச்சநீதிமன்றம் சொல்லாத கருத்தை எல்லாம் சொன்னதாக சொல்லி வருகிறார் ராசா.

எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து தேர்தலை சந்திக்க திராணியில்லாத ஸ்டாலினும் ராசாவும் அதிமுக அபாண்ட குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்.

ஸ்டாலின் கோவைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது… எச்சரித்த அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ்

ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு கொஞ்சம் கூட யோக்கியதை கிடையாது. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து 18 மாதம் டெல்லி திகார் சிறையில் இருந்தவர் ராசா. கலைஞர் டிவி தொடங்குவதற்காக மோசடி செய்தவர் கனிமொழி. இவர்களுக்கு அதிமுக மீது ஊழல் பழி சுமத்த என்ன அருகதை இருக்கிறது.

தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது ஒரு தொலைத்தொடர்பு நிலையத்தையே வீட்டுக்குள் உருவாக்கி வைத்திருந்தவர். அந்த ஊழல் மோசடியினாலேயே அவர் பதவியை இழந்தார். இத்தனை ஊழல்கள் செய்திருக்கும் திமுகவுக்கு என்ன யோக்கியதை இருக்குது? அதுமுகவை பற்றி பேச?

முன்னாள் முதல்வரைப்பற்றியும், எடப்பாடி பழனிச்சாமியை பற்றியும் தரக்குறைவாக பேசுவதை ராசாவும், ஸ்டாலுனும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஸ்டாலினை கோவைக்குள் வரவிடமாட்டோம். ஸ்டாலின் கோவைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது’’ என்று எச்சரித்தார்.