திருச்செந்தூர் கடலில் நீராடி கோபுர தரிசனம் செய்த முருகன்

 

திருச்செந்தூர் கடலில் நீராடி கோபுர தரிசனம் செய்த முருகன்

திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவடையும் என்று பாஜக வேல் யாத்திரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கினார் முருகன். தடையை மீறி யாத்திரை சென்றதற்காக முருகன் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் கடலில் நீராடி கோபுர தரிசனம் செய்த முருகன்

முருகனின் 6 படை வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்கிற எல்.முருகனின் திட்டத்தின்படி 2 படை வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில், புயலின் காரணமாக யாத்திரை தடைபட்டிருந்தது.

இந்நிலையில் புயல்,மழையினால் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள படை வீடுகளில் வழிபாடு நடத்தப்படுகிறது. நாளை 7.12.2020 அன்று திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு பெறுகிறது.

திருச்செந்தூர் கடலில் நீராடி கோபுர தரிசனம் செய்த முருகன்

வெற்றிவேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நாளை திருச்செந்தூரில் நடைபெறவுள்ளதை அடுத்து பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன்
இன்று காலை திருச்செந்தூர் கடலில் நீராடி கோபுர தரிசனம் செய்தார்.

நாளை நடைபெறும் நிறைவு நாள் கூட்டத்தில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பார் என்று பாஜக முருகன் அறிவித்திருக்கும் நிலையில்,
திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு கூட்டம் நடத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.