18,19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி!

 

18,19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் இம்முறை அதிகமாக மழை பெய்துள்ளது.  வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வந்த மழை, அது புயலாக மாறி அந்தமான் பகுதியை நோக்கி விலகிச் சென்றதால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் இம்முறை அதிகமாக மழை பெய்துள்ளது.  வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வந்த மழை, அது புயலாக மாறி அந்தமான் பகுதியை நோக்கி விலகிச் சென்றதால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது.

rain

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது. நேற்றிரவும், இன்று அதிகாலையிலும் சென்னையிலும், சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.  இந்நிலையில், வரும் 18ம் தேதி (திங்கட்கிழமை) வங்கக்கடலில் புதிதாக மேலடுக்கு சுழற்றி உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியுள்ளார்.

rain

இது குறித்து அவர் கூறும் போது, கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னைக்கு மழை கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி கடலோரம் வரை பரவி வரும் போது 18,19 தேதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகும் என தெரிவித்தார்.