ரஜினி என்ன பிஜேபியின் பிராஞ்ச் ஆபீசா? எஸ்.வி.சேகருக்கு கேள்வி

 

ரஜினி என்ன பிஜேபியின் பிராஞ்ச் ஆபீசா? எஸ்.வி.சேகருக்கு கேள்வி

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளதை அடுத்து, சட்டமன்ற தேர்தலில் அதியசம் நிகழும். ரஜினிக்கு வெற்றி உறுதியாகிவிட்டது. அவரின் கொள்கைக்காகவே ஒரு கோடி இளைஞர்கள் வாக்கு உறுதியாகிவிட்டது என்று பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார்.

பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரின் இந்த வாழ்த்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினி என்ன பிஜேபியின் பிராஞ்ச் ஆபீசா? எஸ்.வி.சேகருக்கு கேள்வி

எஸ்.வி.சேகர் இவ்வாறு ரஜினிக்கு வாழ்த்து சொன்னதற்காக பலரும் அவருக்கு, ஹலோ சார்,, நீங்க பிஜேபி,, மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசுறீங்க என்றும், ரஜினி என்ன பிஜேபியின் பிராஞ்ச் ஆபீசா… இப்படி சந்தோசப்படறீங்க என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிஜேபியில் இருந்துகொண்டு அவர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்ததால், அவர் ரஜினி கட்சியில் சேருவதற்காக துண்டு போடுகிறார் என்று, அண்மையில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தியதையும் மனதில் வைத்து, எல்லா பக்கமும் துண்டு போடாதீங்க.. என்றும் கமெண்ட் செய்கிறார்கள்.

ரஜினி என்ன பிஜேபியின் பிராஞ்ச் ஆபீசா? எஸ்.வி.சேகருக்கு கேள்வி

ஒரு கட்சியில் இருந்துகொண்டே இன்னொரு கட்சிக்கு கொடிபிடிப்பதால், எஸ்.வி.சேகரை இப்படியாக கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள், ஒரு கோடி இளைஞர்கள் வாக்கு உறுதி என்று கூறியிருப்பதால், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஒரு கோடி இளைஞர்களா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.