ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தியுடன் யாரும் பேசக்கூடாது… கட்சியினருக்கு பாஜக கண்டிப்பு

 

ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தியுடன் யாரும் பேசக்கூடாது… கட்சியினருக்கு பாஜக கண்டிப்பு

தொழிலதிபர் ரா.அர்ஜூன மூர்த்தி, மின்னணு பரிவர்த்தனையின் புதிய அலையை ஏற்படுத்தியவர். பாஜகவின் தமிழ்மாநில அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார். அண்மையில் நடந்த பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்று கைதானார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தான் தொடங்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி என்று அறிவித்ததும் பரபரப்பு எழுந்தது.

பாஜகவில் நிர்வாகியாக இருக்கும் ஒருவர் எப்படி ரஜினி கட்சிக்கும் நிர்வாகியாக இருக்கிறார். அப்படியானால், ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக அறிவித்திருக்கிறது.

ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தியுடன் யாரும் பேசக்கூடாது… கட்சியினருக்கு பாஜக கண்டிப்பு

முன்னதாக அர்ஜூனமூர்த்தி ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டதாக தெரிவித்திருக்கிறது பாஜக.

இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில், ‘’தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்றும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறூத்தப்படுகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தியுடன் யாரும் பேசக்கூடாது… கட்சியினருக்கு பாஜக கண்டிப்பு