அண்டா,குண்டா,சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை… அமைச்சர் அதிரடி

 

அண்டா,குண்டா,சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை… அமைச்சர் அதிரடி

மதுரையில் இனி தண்ணீர் பிடிக்க அண்டா, குண்டா, சட்டிக்கெல்லாம் வேலையில்லை என்று தெரிவித்தார் கூட்டுறவுத்துறை அமைச்செ செல்லூ ராஜூ. அவர் மேலும், முல்லைப்பெரியாறில் 1,295 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டத்தினால் மக்கள் இனிமேல் வீட்டிலிருந்தே தண்ணீர் பிடிக்கலாம் என்று தெரிவித்தார்.

மதுரை மக்களின் கனவுத்திட்டம் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகும். இத்திட்டம் 1,295 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

அண்டா,குண்டா,சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை… அமைச்சர் அதிரடி

அமைச்சர்கள் செல்லூராஜூ, உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏ.பழனிசாமி, விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முதல்வரின் பயண ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

அண்டா,குண்டா,சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை… அமைச்சர் அதிரடி

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தினால், மக்கள் இனி தண்ணீருக்காக சாலையில் நின்று பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டுக்கே தண்ணீர்தேடி வரும் என்பதை, மதுரையில் இனி தண்ணீர் பிடிக்க அண்டா, குண்டா, சட்டிக்கெல்லாம் வேலையில்லை என்று தெரிவித்தார்.