“கட்டிக்கொடுக்கறதுக்குள்ள கட்டிலுக்கு அலையறியே”திட்டிய தந்தையால் மகளுக்கு நடந்த அதிர்ச்சி

 

“கட்டிக்கொடுக்கறதுக்குள்ள கட்டிலுக்கு அலையறியே”திட்டிய தந்தையால் மகளுக்கு நடந்த அதிர்ச்சி

தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்த மகளை அவரின் தந்தை நடுரோட்டில் பொது மக்கள் முன்னிலையிலேயே வெட்டி வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“கட்டிக்கொடுக்கறதுக்குள்ள கட்டிலுக்கு அலையறியே”திட்டிய தந்தையால் மகளுக்கு நடந்த அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் கஜ்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்பன்னா கிராமத்தில் ஒரு 18வயது டீனேஜ் பெண் அந்த ஊரை சேர்ந்த 20 வயது வாலிபரை காதலித்து வந்தார் .இவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது .அந்த ஊரிலுள்ள வாய்க்கால் ,வரப்பு, தோட்டம் என்று பல இடங்களில் ஒன்றாக சுற்றினார்கள் .இந்நிலையில் இவர்களின் காதல் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்தது .இதனால் கடுமையான கோபமுற்ற அவரின் தந்தை அந்த பெண்ணின் காதலை கண்டித்தார் .அதனால் வழக்கமாக சினிமாவில் வரும் தந்தையை போல வீட்டிற்குள் வைத்து பூட்டினார் .
ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அந்த பெண் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு அவருடைய காதலலன் வீட்டிற்கு சென்று விட்டார் .மறுநாள் புதன் கிழமையன்று தன்னுடைய மகளை காணாத தந்தை கோபமுற்று ஒரு கோடாரி எடுத்துக்கொண்டு மகளை தேடி காதலன் வீட்டிற்கு சென்றார் .அப்போது அவரின் மகள் காதலனோடு கொஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கோபமுற்று மகளை ,வீட்டிலிருந்து வெளியே இழுத்து போட்டு பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரை துண்டு துண்டாக கோடாரியால் வெட்டி தள்ளினார் .உடனே இந்த விஷயம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு , போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .மகளை பொதுமக்கள் வெட்டி வீசிய தந்தையை கைது செய்தார்கள் .அவரின் காதலனுக்கும் இந்த கலவரத்தில் அடிபட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

“கட்டிக்கொடுக்கறதுக்குள்ள கட்டிலுக்கு அலையறியே”திட்டிய தந்தையால் மகளுக்கு நடந்த அதிர்ச்சி