18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு; செங்கோட்டையன் அவசரமாக டெல்லி பயணம்

 

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு; செங்கோட்டையன் அவசரமாக டெல்லி பயணம்

சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் சூழலில் அமைச்சர் செங்கோட்டையன் அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறார்.மேலும் இந்த தீர்ப்பால் பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா இல்லை தப்புமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பழனிசாமி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். இதற்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும்டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.அவர் எதற்காக டெல்லி சென்றார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் கல்வி துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.