18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்ன சொல்கிறார் வைகோ?

 

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்ன சொல்கிறார் வைகோ?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார். இது டிடிவி தரப்புக்கு ஏமாற்றத்தையும், ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது. மேலும், அடுத்தகட்டமாக தினகரன் தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தினகரன் தரப்பு மேல்முறையீட்டுக்கு செல்வார்களா என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை.

ஜனநாயக நலனை கருதி 20 தொகுதிகளிலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.