ஒரே ஏரியாவில் பிச்சை எடுப்பதில் மோதல்: நடுரோட்டில் ஒருவர் அடித்துக்கொலை

 

ஒரே ஏரியாவில் பிச்சை எடுப்பதில் மோதல்: நடுரோட்டில் ஒருவர் அடித்துக்கொலை

ஒரே ஏரியாவில் பிச்சை எடுத்து வந்ததால் இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், தமிழ்நாட்டை சேர்ந்தவரை வடமாநிலத்து பிச்சைக்காரர் நடுரோட்டில் அடித்துக்கொன்ற கொடூரத்தினால் அதிர்ந்து போயிருக்கிறது கன்னியாகுமரி.

சுற்றுலா தளங்களிலும், ஆன்மிக தளங்களிலும் பிச்சைக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். கன்னிகுமரியிலும் அப்படித்தான்.

ஒரே ஏரியாவில் பிச்சை எடுப்பதில் மோதல்: நடுரோட்டில் ஒருவர் அடித்துக்கொலை

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பலமொழி பேசும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். பகலெல்லாம் பிச்சை எடுக்கும் இவர்கள் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் தங்கிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பிச்சை எடுத்து வந்துள்ளார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதத்தில் ஆத்திரப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்துக்காரர், தமிழரை அடித்து கீழே தள்ளி இருக்கிறார்.

நடுரோட்டில் கீழே விழுந்தவரை கையில் இருந்த தடியினால் ஓங்கி ஓங்கி அடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்துவிட்டார் தமிழர்.

உயிரிழந்த தமிழரின் உடலை குமரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தவரை கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ்.