போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

 

போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம்(39), சண்முகவேல்(40). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று வேலுச்சாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும், சண்முகவேலுவும் மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாகவே அவர்கள் மது அருந்திவிட்டு வேலுசாமியை குத்தி கொலை செய்தவற்காக காத்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்தவர் வேலுச்சாமியின் தோற்றத்தில் இருந்திருக்கிறார். போதையில் இருந்த முருகானந்தமும், சண்முகவேலுவும் அவர்தான் வேலுச்சாமி என்று நினைத்து குத்தி கொலை செய்துவிட்டனர்.

போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

கொலை செய்தபிறகு உடலை தூக்கி அப்புறப்படுத்தலாம் என்று நினைத்து தூக்கியபோதுதான் அவர்களுக்கு அது வேலுச்சாமி இல்லை என்று தெரிந்திருக்கிறது.

உடனே ஏறுன போதை எல்லாம் இறங்கி, என்ன செய்வது என்று கையை பிசைந்தவர்கள், கோவை சென்று நண்பர் தர்மா வீட்டில் தங்கிவிட்டனர்.

கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பதையும், கொலை செய்தவர்களையும் கண்டறிந்த ராமேஸ்வரம் போலீசார், முருகானந்தம் – சண்முகவேல் இருவரையும் தேடி வந்தனர்.

இதை அறிந்துகொண்ட சண்முகவேல், முருகானந்தம், தர்மா ஆகியோர் கோவை சாய்பாபா காலணியில் உள்ள போலீசில் சரணடைந்துள்ளனர். கோவை போலீசார் ராமேஸ்வரம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.