டுவிட்டர், பேஸ்புக்கில்தான் நீ புலியா? திமுக எம்.பி. மீது அண்ணாமலை பாய்ச்சல்

 

டுவிட்டர், பேஸ்புக்கில்தான் நீ புலியா? திமுக எம்.பி. மீது அண்ணாமலை பாய்ச்சல்

தமிழகம் முழுவதும் தடையை மீறி வேல்யாத்திரையை நடத்தி வரும் பாஜகவினர், பொதுக்கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கரூரில் வேல்யாத்திரை நடத்துவதற்காக ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வரும் வேளையில், Gobackmodi என்று சுவர் விளம்பரங்களை செய்திருந்தனர்

டுவிட்டர், பேஸ்புக்கில்தான் நீ புலியா? திமுக எம்.பி. மீது அண்ணாமலை பாய்ச்சல்

திமுகவினர். இதனால் ஆவேசம் அடைந்த பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ‘’எங்கள் மோடிக்கு மரியாதை கொடுக்காதவர்கள் கரூரில் அரசியல் செய்ய முடியாது’’என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஒரு வாரத்திற்குள் அந்த சுவர் விளம்பரங்களை அழிக்காவிட்டால், அடிக்கடி கட்சி மாறும் செந்தில்பாலாஜியை ‘ஐந்துகட்சி அமாவாசை’, என்றும், வலைத்தளங்களில் ஸ்டாலினை சுடலை என்று சொல்லுவதால் ‘சுடலை ராஜா’ என்றும் நாங்கள் சுவரில் எழுதுவோம் என்றும் எச்சரித்தார். அண்ணாமலை எச்சரிக்கை விடுத்த மறுதினமே சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

டுவிட்டர், பேஸ்புக்கில்தான் நீ புலியா? திமுக எம்.பி. மீது அண்ணாமலை பாய்ச்சல்

இந்நிலையில் தர்மபுரி்யில் நடைபெறூம் வேல்யாத்திரையை முன்னிட்டு அம்மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தர்மபுரியிலும் Gobackmodi என்று சுவர் விளம்பரங்களை பார்த்து ஆவேசம் அடைந்தார். இதனால் அவர் தர்மரி திமுக எம்.பியை கடுமையாக விமர்சித்தார்.

‘’என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரை பார்த்து கேட்டேன். அவர் வரவில்லை. டுவிட்டர், பேஸ்புக்கில்தான் நீ

புலியா?’’என்று கேள்வி எழுப்பியவர்,

‘’கோபாலபுரத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காகத்தான் திமுகவின் தலைவர் ஆகியிருகிறார். முதல்வர் கனவிலும் இருக்கிறார்’’என்று ஸ்டாலினை சாடியவர்,

‘’தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் இதுவரை மக்களுக்கு செய்த திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? பிச்சை எடுத்துதானே போன முறை ஓட்டு வாங்கி ஜெயிச்சீங்க’’என்று கடுமையாக விமர்சித்தார்.