கார்த்திக் – பாத்திமா : காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கும் காவல்நிலையங்கள்

 

கார்த்திக் – பாத்திமா : காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கும் காவல்நிலையங்கள்

மதம் மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஒவ்வொரு காவல்நிலையங்களாக அலைந்தும் எந்த காவல்நிலையமும் பாதுகாப்பு வழங்க மறுத்திருக்கிறது. மதத்தின் மீதுள்ள அச்சத்தினால் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதாக தெரிகிறது.

கோவை பெரியநாயக்கன் பாளையம் கார்த்திக், சிவகங்கை பாத்திமா இருவரும் கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விபரம் பெண் வீட்டாருக்கு தெரிந்து, அவர்கள் பாத்திமாவை கண்டித்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்திக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

கார்த்திக் – பாத்திமா : காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கும் காவல்நிலையங்கள்

விபரம் தெரிந்து தங்கள் வீட்டார் பிரச்சனை செய்வார்கள் என்று பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக்குடன் தஞ்சம் அடைந்தார் பாத்திமா. பெண் வீட்டாருக்கு போன் செய்த போலீசார், அவர்களுக்கு பாதுகாப்பு தர மறுத்தனர். இதனால், துடியலூர் காவல்நிலையம் சென்று பாதுகாப்பு கேட்டனர். அங்கேயும் மறுப்பு தெரிவிக்கப்படுள்ளது.

இதற்கிடையில் தங்களது பெண் காணாமல் போய்விட்டதாக சிவகங்கையில் பாத்திமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் கோவைக்கு சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் 50க்கும் மேற்பட்டோர் கோவைக்கு சென்றுள்ளனர். விசயம் அறிந்த காதல் ஜோடி பதைப்புடன் வேறு காவல்நிலையைத்தை தேடி சென்றிருக்கிறார்கள்.