உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்கள்… முதல்வருக்கு சீமான் வைக்கும் கோரிக்கை

 

உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்கள்… முதல்வருக்கு சீமான் வைக்கும் கோரிக்கை

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் தீபாவளி தினத்தன்று பாபுலாலுக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிவந்தார்கள். இந்த போராட்டத்தில் இடிபாடுகளில் 4 தீயணைப்பு வீரர்கள் சிக்கினார்கள். அதில் படுகாயமடைந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்கள்… முதல்வருக்கு சீமான் வைக்கும் கோரிக்கை

இந்த துயர சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’முன்கள வீரர்களாகத் தீயை அணைக்கப் போராடியபோது சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்களும் அவ்விபத்தில் சிக்குண்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர் எனும் செய்தி பெருந்துயரத்தைத் தந்தது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். இவ்விபத்தில் சிக்குண்டு பலத்தக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சின்னக்கருப்பு, கல்யாணக்குமார் ஆகிய இருவரும் விரைந்து குணமடைந்து மீண்டு வரவேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ள அவர்,

‘’ அதிகப்படியானப் பாதுகாப்பு குறைபாடுகள், தரமற்றப் பாதுகாப்பு உபகரணங்கள், மிதமிஞ்சிய பணிச்சுமை, வயதுக்கு மீறிய பணி போன்றவைகளே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முழுமுதற் காரணங்களாகின்றன. இதனால், இந்த ஆண்டில் மட்டும் 3 தீயணைப்பு வீரரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வகை உயிரிழப்புகள் இனி ஒருபோதும் தொடர்ந்திராத வண்ணம் முறையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தீயணைப்பு வீரர்களின் உயிர்காக்க தகுந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்திட வேண்டும்’’என்று வலியுறுத்தியுள்ளார்.

உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்கள்… முதல்வருக்கு சீமான் வைக்கும் கோரிக்கை

’’பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்கள் உயிர்காக்க தங்கள் உயிரை இழப்பவர்களுக்கு, அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதே நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. அந்தவகையில், தங்கள் உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அளித்துள்ள 25 இலட்ச ரூபாய் நிதியுதவியானது போதுமானதில்லை. ஆகவே, தற்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை 25 இலட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்’’எனவும், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் வீரர்களுக்கான நிதியுதவியை 3 இலட்சத்திலிருந்து 10 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்’’என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.