முன்னாள் காதலரின் தொல்லை அதிகரிப்பு: அண்ணனின் ஆத்திரத்தால் நிம்மமதி இழந்த மூன்று குடும்பம்

 

முன்னாள் காதலரின் தொல்லை அதிகரிப்பு: அண்ணனின் ஆத்திரத்தால் நிம்மமதி இழந்த மூன்று குடும்பம்

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் அருகே இருக்கும் சொக்கநாதன் புத்தூரில் வசித்து வருபவர் செந்தில்குமார். அதே பகுதியில் வசித்து வந்தவர் ரவி. இவர் செந்தில்குமாரின் தங்கையிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். ரவியுடன் பழகக்கூடாது என்று தங்கையிடம் பலமுறை கண்டித்திருக்கிறார் செந்தில்குமார்.

அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கையும் ரவியுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால், ரவியை விட்டுவிட்டு வேறொருவருடன் தங்கை பழகுவார் என்று செந்தில்குமார் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. செந்தில்குமார் எத்தனையோ முறை கண்டித்தும், தங்கை உறுதியாக நின்று காதலித்தவரையே கல்யாணமும் செய்துகொண்டார்.

முன்னாள் காதலரின் தொல்லை அதிகரிப்பு: அண்ணனின் ஆத்திரத்தால் நிம்மமதி இழந்த மூன்று குடும்பம்

ஆனால், இது முன்னாள் காதலர் ரவிக்கு உறுத்தலாக இருந்து வந்துள்ளது. தன்னை எப்படி கழட்டிவிடலாம் என்று அப்பெண்ணிடம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ளவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததால் ரவியின் தொல்லையை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது அப்பெண்ணுக்கு தலைவலியாக இருந்துள்ளது.

நாளடைவில் அப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்த ரவியின் விவகாரம் செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட செந்தில்குமார், கடைத்தெருவில் நின்றிருந்த ரவியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

சேத்தூர் போலீசார் இந்த கொலை குறித்து வழக்குபதிவு செய்துள்ளனர். ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கரும் இந்த கொலை வழக்கு குறித்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்.

முன்பின் யோசிக்காமல் உண்டாகும் உறவுகளாலும் அது தொடர்பான சம்பவத்தினாலும் மூன்று குடும்பங்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றன.