அதிமுகவின் புதிய மூவர் அணி!

 

அதிமுகவின் புதிய மூவர் அணி!

நெருங்கி வரும் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பணிகளிலும் தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது அதிமுக. பல்வேறு மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியில் வேகம் காட்டிய அதிமுக, ஊடகங்களில் அதிமுக குறித்த செய்திகள் முழுமையாக இடம்பெற வேண்டும் என்று புதிய அணியை அமைத்திருக்கிறது.

ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நமது அம்மா நாளிதழ் ஆசிரியரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான மருது அழகுராஜ் மற்றும் முன்னாள் ஊடகவியலாளரும், எம்.பி.,யுமான ரபி பெர்னார்ட்டினை நியமித்திருக்கிறது.அதிமுக ஊடக இணை ஒருங்கிணைப்பாளராக அஸ்பயர் சுவாமிநாதனை நியமனம் செய்திருக்கிறது.

அதிமுகவின் புதிய மூவர் அணி!

மருது அழகுராஜினால் அரசின் சாதனைகளை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்ல முடியும் எனவும், ரவிபெர்ணாட் ஊடகத்துறையில் இருந்தவர் என்பதாலும், அஸ்பயர் சுவாமி நாதன் ஊடகத்துறையில் உள்ளவர்களிடம் அதிக தொடர்புகளை கொண்டுள்ளார் என்பதாலும் இந்த மூவருக்கும் கூடுதலாக ஊடக ஒருங்கிணைப்பாளர் பதவியை அதிமுக தலைமை வழங்கி இருக்கிறது அதிமுக.

அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மருது அழகுராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டுள்ளார்.