“கோழி பண்ணையிலே ,கோழிகளுக்கு நடுவிலே ..”-வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

 

“கோழி பண்ணையிலே ,கோழிகளுக்கு நடுவிலே  ..”-வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை


வீட்டை விட்டு ஓடி வந்த ஒரு பெண்ணை பல வாலிபர்கள் கடத்தி, ஒரு கோழி பண்ணைக்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .
ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தீர்டோலில் வசிக்கும் ஒரு டீனேஜ் பெண் தன்னுடைய பெற்றோரிடம் சண்டைபோட்டு விட்டு வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார் .அவர் எங்கு போவது யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழித்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது சில வாலிபர்கள் அவரை தொடர்பு கொண்டார்கள் .அப்போது அந்த வாலிபர்கள் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோழி பண்ணைக்கு கூட்டி சென்றார்கள் .பிறகு அந்த கோழி பண்ணையிலேயே வைத்து அவரை 22 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .

“கோழி பண்ணையிலே ,கோழிகளுக்கு நடுவிலே  ..”-வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை


பிறகு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அந்த கோழிப்பன்னைக்கு அடிக்கடி ஆட்கள் வந்து செல்வதையும் ,அங்கு ஒரு பென்ன்னின் குறல் கேட்பதையும் வைத்து சந்தேக பட்டு அந்த பண்ணைக்குள் சென்று பார்த்த போது .அங்கு ஒரு 17 வயது பெண்ணை அடைத்து வைத்துள்ள விவரம் தெரிந்து கொண்டார்கள் .
உடனே அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில்புகாரளித்தார்கள் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விரைந்து வந்து அந்த பண்னைக்குள் நுழைந்து அந்த பெண்ணை மீட்டனர் .பிறகு அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் . .
பிறகு தீவிர விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார், மற்றவரை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பின்னர் மீட்கப்பட்ட அந்த பெண் மாவட்ட குழந்தைகள் நலக் குழு (சி.டபிள்யூ.சி) முன் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு இருந்து அவர் ஒரு அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

“கோழி பண்ணையிலே ,கோழிகளுக்கு நடுவிலே  ..”-வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை