கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் சிறுவனை சுட்டுக் கொன்ற மதவெறிக் கும்பல்!

 

கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் சிறுவனை சுட்டுக் கொன்ற மதவெறிக் கும்பல்!

கோவிலுக்குச் சென்ற 17 வயது தலித் சிறுவனை அந்தப் பகுதியின் உயர்சாதியைச் சேர்ந்த சிலர் உள்ளே வரக்கூடாது என்று தடுத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோம்கேரா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலுக்கு வழிபாடு செய்ய ஜாதவ் என்ற சிறுவன் சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுவன் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்து சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் லாலா சவுகான், ஹோராம் சவுகான், பூஷண் மற்றும் ஜஸ்வீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் சிறுவனை சுட்டுக் கொன்ற மதவெறிக் கும்பல்!

கோவிலுக்குள் செல்ல தடை விதித்தது குறித்து அந்தச் சிறுவன் போலீசில் புகார் கொடுத்துள்ளான். ஆனால் போலீஸ் தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் சனிக்கிழமை இரவு ஜாதவ் வீட்டிற்குள் நுழைந்த அந்த நான்கு பேர் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஜாதாவின் குடும்பத்தினர் ஓடிவந்துள்ளனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவனை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே ஜாதவ் உயிரிழந்துள்ளான்.

காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்ரோஹா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். லாலா சவுகான் மற்றும் ஹோராம் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தப்பிச் சென்ற இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஜாதிவெறியால் நடைபெற்ற இந்தக் கொலை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.