ஶ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணமில்லாத ரூ.17 லட்சம் பறிமுதல்!

 

ஶ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணமில்லாத ரூ.17 லட்சம் பறிமுதல்!

காஞ்சிபுரம்

ஶ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற வங்கி பணம் 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஶ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணமில்லாத ரூ.17 லட்சம் பறிமுதல்!

அப்போது, அந்த வழியாக ஏடிஎம்மில் நிரப்புவதற்காக பணம் எடுத்து வந்த மினிலோடு வேனை மறித்து சோதனையிட்டனர். அப்போது, வேனில் சுமார் 17 லட்சம் ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்த நிலையில், அதற்கான உரிய ஆவணங்கள் வங்கி ஊழியர்களிடம் இல்லை.

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதனை ஶ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமாதவனிடம் ஒப்படைத்தனர்.