சிவகங்கையில் உரிய ஆவணமில்லாத ரூ.17 லட்சம் பறிமுதல்!

 

சிவகங்கையில் உரிய ஆவணமில்லாத ரூ.17 லட்சம் பறிமுதல்!

சிவகங்கை

சிவகங்கையில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 17 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடிபட்டி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனையிட்டனர். அதில் அவர் 17 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்துச்செல்வது தெரியவந்தது.

சிவகங்கையில் உரிய ஆவணமில்லாத ரூ.17 லட்சம் பறிமுதல்!

இதுகுறித்து அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரை சேர்ந்த பிரகாஷ் என்பதும், வியபாராத்திற்கு பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை தேர்தல் அலுவலர் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.