தாத்தா கூப்பிடுகிறார் என்று வீட்டுக்குள் போன 17வயது சிறுமியை…சிக்கிய 63வயது முதியவருக்கு..

 

தாத்தா கூப்பிடுகிறார் என்று வீட்டுக்குள் போன 17வயது சிறுமியை…சிக்கிய 63வயது முதியவருக்கு..

தாத்தா என்ற நினைப்பில் வீட்டுக்குள் சகஜமாக சென்ற அந்த சிறுமிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. சிறுமிக்கு அந்த அதிர்ச்சியை கொடுத்த முதியவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது போக்சோ நீதிமன்றம்.

தாத்தா கூப்பிடுகிறார் என்று வீட்டுக்குள் போன 17வயது சிறுமியை…சிக்கிய 63வயது முதியவருக்கு..

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை காந்திநகரில் பால்வெட்டும் தொழில் செய்து வந்த கேசவன்(63) வசித்து வருகிறார். இவர் அதே பொது ஸ்தலம் பகுதி்யை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பாசமாக பழகி வந்துள்ளார்.

தாத்தா என்ற நினைப்பில் சிறுமியும் அவருடன் பாசமாக பழகி வந்துள்ளார். ஒருநாள் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்திருக்கிறார்.
தாத்தா எதுக்காக கூப்பிடுகிறார் என்ற யோசனையிலேயே, ஆனால் அப்படி ஒரு எண்ணத்தில் தாத்தா இருப்பார் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாததால், அந்த சிறுமி வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

தாத்தா கூப்பிடுகிறார் என்று வீட்டுக்குள் போன 17வயது சிறுமியை…சிக்கிய 63வயது முதியவருக்கு..

வீட்டுக்குள் வந்த சிறுமியிடம், கேசவன் ஒருமாதிரி்யாக பேசி இருக்கிறார். இதில் அதிர்ந்துபோன சிறுமி, மேலும் கேசவன் தன்னை தொட்டுத் தொட்டுப்பேசவும் அதிர்ச்சியாகி வெளியே செல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால், கதவை அடைத்துக்கொண்டு, ஆசை வார்த்தைகளை சொல்லிக்கொண்டே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் கேசவன்.

வீட்டிற்கு வந்ததும் சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் பெற்றோர் விசாரித்து, குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், கேசவனை கைது செய்து நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கடந்த 2016ல் நடந்த இந்த சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கேசவனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி எழில் வேலவன்.