17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

 

17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது  போக்ஸோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது  போக்ஸோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

harassment

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவருக்கு கல்லூரியின்  வரலாற்றுத் துறைத் தலைவராக உள்ள பேராசிரியர் ரஞ்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

harassment

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா விசாரணை நடத்தியுள்ளார். அதில், கல்லூரியில் சேர்ந்தது முதலே அந்தப் பேராசிரியர் தனக்கு தொல்லை கொடுத்து வந்தார். ஒருமுறை கல்லூரிக்கு மொபைல் போன் கொண்டு வந்தேன். அந்த மொபைலை வாங்கிவைத்துக் கொண்ட  அவர்  பின்னர் மொபைலை திரும்பக் கொடுப்பதற்காக என்னை அவரது அறைக்கு அழைத்து  பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார். விசாரணையைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இதையடுத்து ரஞ்சன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் பேராசிரியர் ரஞ்சன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.