17 ஆண்களை ஏமாற்றி உல்லாசமாக வாழ்ந்த பெண்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!?

 

17 ஆண்களை ஏமாற்றி உல்லாசமாக வாழ்ந்த பெண்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!?

பெண்  ஒருவர் ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண ஆசைகாட்டி  லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம்: பெண்  ஒருவர் ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண ஆசைகாட்டி  லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவியைச் சேர்ந்தவர்  பாலமுருகன். பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வரும் இவருக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடும் படலம் ஆரம்பித்துள்ளது. இதனால் கடந்த  கடந்த 2016ம் ஆண்டு தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளார். அப்போது அவருக்குச் சேலத்தை  மாரிமுத்து மகள் மேகலா அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதையடுத்து இவருவரும் புகைப்படங்களை அனுப்பியும் செல்போனில் பேசியும் வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பாலமுருகன் மேகலாவை காதலிக்க ஆரம்பித்துள்ளார். மேகலா தான் சென்னையில் பணிபுரிந்து வருவதாகக் கூறியதையடுத்து  பாலமுருகன் மேகலாவை சந்திக்க சென்னைக்கு  வந்து சென்றுள்ளார். 

abuse

இதை தொடர்ந்து  தனது குடும்ப கஷ்டங்களைச் சொல்லி அடிக்கடி தன்னிடம் பணம் கேட்க ஆரம்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து காதல் மயக்கத்தில் இரண்டே ஆண்டுகளில் லட்சக்கணக்கில், தங்க, வைர நகைகள், துணிகள் என எடுத்து கொடுத்துள்ளார் பாலமுருகன். ஆனால் மேகலா மாமன் மகன் கணபதியுடன் நெருக்கமாக இருப்பதாகக்  நண்பர்கள் மூலம் பாலமுருகனுக்குத்  தகவல் கிடைத்தது. இதனால் பாலமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை பற்றிய  விசாரணையில் இறங்கிய போது அவர்  கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர், கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளதைக் கண்டுபிடித்தேன். இது குறித்து பாலமுருகன் மேகலாவிடம் கேட்டபோது, ஆம் உண்மை தான், உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ என்று பலமுருகனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் மேகலா. 

balamurugan

இது குறித்து பிரபல வார இதழுக்குப் பேட்டி அளித்துள்ள பாலமுருகன், இதுவரை மேகலாவுக்கு 35 லட்சம் வாராய் கொடுத்துள்ளேன். ஆண்களுக்கு நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் புகைப்படம் எடுத்து அனுப்பி அவர்களை தன்  வலையில் சிக்கவைத்துள்ளார். அவர் குறித்து நான் காவல்துறையில் புகார் கொடுத்ததற்குப் பாதிக்கப்பட்ட மொத்த  நபர்களையும் அழைத்து வாருங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்  என்று கூறி விட்டனர். இனியும் அவரால் யாரும் பாதிக்கப்படக் கூடாது’ என்று கண்ணீர்  மல்க பேட்டியளித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்தால் பெரும்பாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, ஆண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்திற்கு எதிராகவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இன்றைய ஆண்களின் மனநிலையாக உள்ளது.