ஆஷா மீது சந்தேகம்; 16 இடங்களில் கத்தியால் குத்தி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட அஜித்

 

ஆஷா மீது சந்தேகம்; 16 இடங்களில் கத்தியால் குத்தி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட அஜித்

மனைவி ஆஷா மீது சந்தேகம் வலுத்து வந்ததால் ஆத்திரத்தில் 16 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார் கணவன் அஜித். இச்சம்பவம் சென்னை அபிராமபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஷா மீது சந்தேகம்; 16 இடங்களில் கத்தியால் குத்தி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட அஜித்

சென்னை ராதாகிருஷ்ணபுரம் சுந்தரம் சாலையில் வசித்து வருகிறார்கள் அஜித் – ஆஷா தம்பதியினர். அஜித்துக்கு போதை மாத்திரை பழக்கம் இருந்துவந்துள்ளது. தினமும் போதையுடன் வந்து ஆஷாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

சமீப காலமாக ஆஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று இரவு போதை மாத்திரை சாப்பிட்டு வீட்டிற்கு போதையுடன் வந்துள்ளார் அஜித். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இதனால் ஆஷாவுக்கு அஜித்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போதையின் உச்சத்தில் இருந்த அஜித்துக்கு ஆத்திரம் வந்து கத்தியை எடுத்து கை,கால், தலை என்று சரமாரியாக 16 இடங்களில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

ஆஷா மீது சந்தேகம்; 16 இடங்களில் கத்தியால் குத்தி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட அஜித்

ஆஷாவின் கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அபிராமபுரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பியோடிய அஜித் வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே அபிராமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர். போதைமாத்திரை பழக்கத்தினால் சைக்கோ மாதிரி சுற்றித்திரிந்ததாக அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.